கம்பஹா மாவட்டத்தின் சபுகஸ்கந்த, சியம்பலாபே தெற்கு பகுதியில் அமைந்துள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்கும் நிறுவனம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து நேற்று (11) மாலை ஏற்பட்டுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிர்ச் சேதங்களோ அல்லது காயங்களோ எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக