பொதுவாக ஆண்களும் பெண்களும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு. வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் பலருக்கும் முடி உதிர்வு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இயற்கையான முறையில் முடி உதிர்வை குறைத்து, முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும் ஒரு எளிய கறிவேப்பிலை முடி பேக் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
கறிவேப்பிலை – 3 கைப்பிடி
தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
முதலில் கறிவேப்பிலையை நன்றாக கழுவி, வெயிலில் நன்கு உலர வைக்க வேண்டும். பின்னர் காய்ந்த கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் கறிவேப்பிலை பொடி, தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலந்து பேக் தயாரித்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை முடியின் உச்சந்தலையிலிருந்து நுனிவரை நன்றாக தடவி, சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு மென்மையான ஷாம்புவை பயன்படுத்தி முடியை அலசிக் கொள்ளலாம்.
இந்த இயற்கை முடி பேக்கை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி உதிர்வு குறைந்து, முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக