'யாரடி நீ மோகினி' படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும், 'வேலாயுதம்' படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சரண்யா மோகன்.
'வெண்ணிலா கபடி குழு', 'ஈரம்' போன்ற தரமான படங்களில் நடித்துப் புகழ்பெற்ற இவர், 2015-ல் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகினார். தற்போது தனது கணவர் மற்றும் ஒரு மகன், மகளுடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சரண்யா மோகனின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள், பல ஆண்டுகள் கடந்தும் அவர் அப்படியே இருப்பதைப் பார்த்து, "இவருக்கு வயசே ஆகாதா?" என ஆச்சரியத்துடன் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக