சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் F. U. Wootler தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லெசி’ என அழைக்கப்படும் Janith Madushanka De Silvaவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டு முதல் இதுவரை, சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு கொண்டு வர முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக மொத்தம் 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் ஒளிந்து இருக்கும் இவ்வாறான சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக