Bengaluru நகரில் உள்ள Kempegowda International Airport விமான நிலையத்தில் ஒரு பிளேட் இட்லி ரூபாய் 315க்கு விற்பனை செய்யப்பட்டதாக ஒரு பயணி தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்த தகவலின்படி, விமான நிலையத்திலுள்ள Rameshwaram Cafe உணவகத்தில் நெய் பொடி இட்லி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பில் வந்தபோது, ஒரு பிளேட் இட்லிக்காக ரூ.315 கட்டணம் குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.
இந்த பில் நகலை அவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்ததையடுத்து, குறித்த விவகம் கவனம் ஈர்த்துள்ளது. விமான நிலையத்திற்கு வெளியே உள்ள சாதாரண உணவகங்களில் கிடைக்கும் விலையை விட, இது மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விமான நிலையங்களில் உள்ள உணவகங்களுக்கு விலை கட்டுப்பாடுகள் இல்லையா? அல்லது வணிகர்கள் தங்கள் விருப்பப்படி விலைகளை நிர்ணயிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? என்ற கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன.
இந்த விவகாரம், விமான நிலையங்களிலுள்ள பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் உயர்ந்த விலை குறித்து மீண்டும் ஒரு முறை பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக