BREAKING
தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை

திருகோணமலையில் மரை இறைச்சி வைத்திருந்த வயது இளைஞர் கைது

திருகோணமலையில் மரை இறைச்சி வைத்திருந்த வயது இளைஞர் கைது

Trincomalee – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரை இறைச்சியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் Department of Wildlife Conservation அதிகாரிகளால் நேற்று (23.02.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மொரவெவ இரண்டாம் வாய்க்கால் பகுதியில் உள்ள வீடொன்றில் மரை இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 500 கிராம் எடையுள்ள மரை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளரான 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை Morawewa பிரதேசத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"