BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தடுப்பில் இருந்த பெண் தப்பியோட்டம் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

தடுப்பில் இருந்த பெண் தப்பியோட்டம் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்புடைய பெண் சந்தேகநபர் தப்பியோடிய சம்பவம் தொடர்பில், இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தின் தகவலின்படி, இரவு நேரப் பொறுப்பதிகாரியாகவும் உதவிப் பணியாளராகவும் கடமையாற்றிய இரண்டு சார்ஜன்ட்கள் மற்றும் சந்தேகநபரின் பாதுகாப்பு பொறுப்பில் இருந்த பெண் கான்ஸ்டபிள் ஆகியோரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக சில நாட்களுக்கு முன்னர் Police Special Task Force Sri Lanka (STF) மொரட்டுவை முகாமின் விசேட நடவடிக்கைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Ratmalana மெலிபன் சந்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் வசமிருந்து 36,650 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் Mount Lavinia Police Station நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், கடந்த 16 ஆம் திகதி இயற்கை உபாதையைத் தீர்க்க வேண்டும் எனக் கூறி பெண் கான்ஸ்டபிளுடன் கழிவறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்து தப்பிச் சென்று, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியோடியுள்ளார்.

எனினும், தப்பியோடிய சந்தேகநபர் அதே நாளில் சுமார் 8 மணித்தியாலங்களுக்குப் பின்னர் Talawathugoda கிம்புலாஎல பகுதியில் விசேட பொலிஸ் குழுவினரால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"