BREAKING
தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை

தடுப்பில் இருந்த பெண் தப்பியோட்டம் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

தடுப்பில் இருந்த பெண் தப்பியோட்டம் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்புடைய பெண் சந்தேகநபர் தப்பியோடிய சம்பவம் தொடர்பில், இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தின் தகவலின்படி, இரவு நேரப் பொறுப்பதிகாரியாகவும் உதவிப் பணியாளராகவும் கடமையாற்றிய இரண்டு சார்ஜன்ட்கள் மற்றும் சந்தேகநபரின் பாதுகாப்பு பொறுப்பில் இருந்த பெண் கான்ஸ்டபிள் ஆகியோரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக சில நாட்களுக்கு முன்னர் Police Special Task Force Sri Lanka (STF) மொரட்டுவை முகாமின் விசேட நடவடிக்கைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Ratmalana மெலிபன் சந்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் வசமிருந்து 36,650 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் Mount Lavinia Police Station நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், கடந்த 16 ஆம் திகதி இயற்கை உபாதையைத் தீர்க்க வேண்டும் எனக் கூறி பெண் கான்ஸ்டபிளுடன் கழிவறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்து தப்பிச் சென்று, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியோடியுள்ளார்.

எனினும், தப்பியோடிய சந்தேகநபர் அதே நாளில் சுமார் 8 மணித்தியாலங்களுக்குப் பின்னர் Talawathugoda கிம்புலாஎல பகுதியில் விசேட பொலிஸ் குழுவினரால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"