Ambanthottai பிரதேசத்தில் நேற்று மாலை அதிர்ச்சியான சம்பவம் இடம்பெற்றது. வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் பாவித்த மகனை, 45 வயதுடைய தந்தை வாளால் வெட்டியதில் 22 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொலிஸார் தகவலின்படி, உயிரிழந்த இளைஞர் நீண்டகாலமாக போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு, இதற்காக வீட்டில் உள்ள பெறுமதிப்பொருட்களை திருடி விற்று வந்தவர்.
நேற்று மாலை, மகனைப் பிடித்து விட்டு தந்தை மற்றும் மகனுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் மதுபோதையில் இருந்த தந்தை, ஆத்திரமடைந்து வாளால் மகனின் தலையில் பலமாக வெட்டியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் குடும்ப மற்றும் சமூகத்துக்குள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, போதைப்பொருள் சிக்கல்கள் குடும்பத்தில் எவ்வளவு தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நினைவூட்டுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக