சூடோமோனாஸ் தொற்று என்பது Pseudomonas aeruginosa என்ற பாக்டீரியாவால் ஏற்படும் முக்கியமான உடல்நலப் பிரச்சனை ஆகும். இந்த பாக்டீரியா பல்வேறு சூழல்களில் வாழக்கூடிய திறன் கொண்டது. இது ஒரு “சந்தர்ப்பவாத நோய்க்கிருமி” (Opportunistic pathogen) என அழைக்கப்படுகிறது. அதாவது, நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை அதிகமாக தாக்கும் தன்மை கொண்டது.
முக்கியமாக சர்க்கரை நோயாளிகள், நீண்டகால நோயாளிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் போன்றவர்களுக்கு இந்தத் தொற்று ஆபத்தானதாக மாறக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தொற்றின் காரணங்கள்:
நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைதல், நீண்டகால மருத்துவமனை தங்கல், திறந்த காயங்கள், சுவாசக் கருவிகள் (Ventilators), கேதீட்டர் போன்ற மருத்துவ சாதனங்கள் பயன்பாடு, மாசுபட்ட நீர் அல்லது சரியாக சுத்தம் செய்யப்படாத மருத்துவ உபகரணங்கள் ஆகியவை இந்த பாக்டீரியா பரவக் காரணமாக இருக்கலாம்.
அறிகுறிகள்:
காயங்களில் பூச்சு உருவாகுதல் மற்றும் சிவப்பு, காய்ச்சல், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று, சிறுநீரில் எரிச்சல் மற்றும் வலி போன்றவை ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். கடுமையான நிலைகளில் இரத்தத் தொற்று (Sepsis) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக மாறும் அபாயமும் உள்ளது.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக