சிவனொளிபாத மலையில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊடகச் சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், சிவனொளிபாத மலையையும் அதன் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பும் கடமையும் என தெரிவித்தார்.
இதற்காக ஒரு விசேட வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் மூலம், யாத்திரிகர்கள் மலையில் கைவிடும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் முறையாக சேகரிக்கப்பட்டு அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிவனொளிபாத மலையை பிளாஸ்டிக் மாசு தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக