பொதுவாக பெண்கள் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க விரும்புகின்றனர். ஆனால் பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்ற தன்மை, கருமை போன்ற பிரச்சினைகள் முக அழகை பாதிக்கின்றன. இதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய சில இயற்கை பேஷியல் முறைகள் நல்ல பலன் தரக்கூடும்.
கடலை மாவில் சிறிது நீர் அல்லது பால் சேர்த்து மிருதுவான பேஸ்ட் போல தயாரித்து முகத்தில் சமமாக தடவ வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் விட்டு குளிர்ந்த நீரால் கழுவலாம். இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி முகத்திற்கு இயற்கை பொலிவை அளிக்கும்.
மஞ்சள் தூளில் தேன் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 5–10 நிமிடங்கள் வைக்கலாம். பின்னர் கழுவினால் கருமை குறைந்து முகம் பிரகாசமாகும். மஞ்சள் இயற்கையான கிருமிநாசினி தன்மை கொண்டது.
எலுமிச்சை சாறுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15–20 நிமிடங்கள் வைக்கலாம். பின்னர் கழுவினால் இது இயற்கை ப்ளீச்சிங் தன்மையால் முகத்தை சுத்தமாகவும் பிரகாசமாகவும் மாற்ற உதவும். (அரிப்பு உள்ளவர்களுக்கு முன் சிறிய பகுதியில்ப் பரிசோதனை செய்யவும்.)
கற்றாழை ஜெல்லை நேரடியாக முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இது சருமத்திற்கு குளிர்ச்சி அளித்து, கரும்புள்ளிகளை குறைக்கவும் உதவும்.
ஓட்ஸில் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் விட்டு மெதுவாக மசாஜ் செய்து கழுவலாம். இது ஸ்க்ரப் போல செயல்பட்டு சருமத்தை மென்மையாக மாற்றும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த இயற்கை முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், முகம் இயற்கையாகவே பொலிவுடன் காணப்படும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக