இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது 'X' (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் இந்த அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறோம்.
இந்த இக்கட்டான தருணத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுடனும் இலங்கை அரசு ஒற்றுமையாக (Solidarity) நிற்கிறது.
இழந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கிக்கொள்ளும் வலிமையையும், அமைதியையும் பாதிக்கப்பட்ட சமூகம் பெற வேண்டும் என இலங்கை விரும்புகிறது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் புலம்பெயர் இலங்கையர்கள் அதிகம் வசிக்கும் நிலையில், இந்தச் செய்தி அங்குள்ள இலங்கைச் சமூகத்தினரிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக