உடவளவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவளவை – தனமல்வில வீதியின் மலபொட்டுஆர பகுதியில் நேற்று (08) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேரியல் சந்தியிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்ற சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் கடுமையாக காயமடைந்த சிறுவன் உடனடியாக உடவளவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் உடவளவை பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக