நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் தரம் 8-இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தனது ஆசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவி முதலில் நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு ஏற்பட்டுள்ள அடிகாயங்கள் மற்றும் உள்காயங்கள் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன:
குறித்த ஆசிரியர் வழக்கமாகவே மாணவிகளுக்குத் தொல்லை கொடுப்பவர்.
மாணவ, மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதையும், அடிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நேற்று (06) இரவு நானுஓயா பொலிஸார் சம்பந்தப்பட்ட ஆசிரியரை அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று (பெப்ரவரி 07, 2026) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் குறித்து கல்வித் திணைக்களம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோரிடையே எழுந்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக