இலங்கை போக்குவரத்து சபையால் இன்று (6) வரலாற்றில் முதன் முறையாக பெண்கள் நடத்துனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனுடன், புதிய நியமனம் பெற்ற பெண்கள் நடத்துனர்களுக்காக புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு, அவர்களின் பணிக்குத் தயாரான நிலைமை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக