இலங்கையிலுள்ள வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் (Medical Research Institute - MRI) உயிருக்கு ஆபத்தான நிபா வைரஸைக் கண்டறிய உயர் தொழிநுட்ப கருவிகளை உடனடியாக மேம்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை, நிபா வைரஸ் பரவலை முன்னோக்கியே கண்டறிந்து அதற்கு பதிலளிக்க, நாட்டின் தயார் நிலையை தீவிரப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிநுட்ப கருவிகள் மூலம், வைரஸ் தொற்று சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு ஆரம்பத்திலேயே பரிசோதனைகள் மேற்கொண்டு, வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய முடியும்.
நிபா வைரஸ் பெரும்பாலும் பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுவதுடன், பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடி தொடர்பு மற்றும் அசுத்தமான உணவு வழியாகவும் பரவும் ஆபத்துள்ளது.
இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் 40% முதல் 75% வரை உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது மிக ஆபத்தான தொற்றுநோய்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக