BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ரஷ்ய வானில் ஒரே நேரத்தில் தோன்றிய நான்கு நிலவுகள்: வைரலாகும் புகைப்படங்கள்

ரஷ்ய வானில் ஒரே நேரத்தில் தோன்றிய நான்கு நிலவுகள்: வைரலாகும் புகைப்படங்கள்

ரஷ்யாவில் ஒரே நேரத்தில் வானில் நான்கு நிலவுகள் தோன்றியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த அரிய காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பதிவாகியுள்ளது.

பூமிக்கு ஒரே ஒரு நிலவு மட்டுமே உள்ள நிலையில், ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் வானில் தோன்றியது பலரிடையே ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இது எவ்வாறு சாத்தியமானது என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்துள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள வானிலை மற்றும் வானியல் ஆர்வலர்கள், இது உண்மையான நிலவுகள் அல்ல என்றும், மாயத்தோற்றம் எனப்படும் Optical Illusion காரணமாக ஏற்பட்ட நிகழ்வு என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு “பாரசெலீன்” (Paraselene) அல்லது “மூன் டாக்” (Moon Dog) என அழைக்கப்படுகிறது.

பூமியிலிருந்து சுமார் 20,000 அடி உயரத்திற்கு மேல் காணப்படும் பனிக்கட்டிகளால் உருவாகும் சிரஸ் (Cirrus) மேகக் கூட்டங்கள் வழியாக நிலவின் ஒளி ஊடுருவிச் செல்லும் போது, ஒளி விலகல் ஏற்படுகிறது. இதன் விளைவாக, உண்மையான நிலவின் இருபுறங்களிலும் கூடுதல் நிலவுகள் போலத் தோற்றமளிக்கும் போலி நிலவுகள் உருவாகின்றன.

பாரசெலீன் நிகழ்வு மிகவும் அரிதான ஒரு வானிலை நிகழ்வாகக் கருதப்படுகின்றது. இதன் காரணமாகவே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் தோன்றியதாகத் தோற்றமளித்ததாக வானிலை ஆர்வலர்கள் விளக்கமளித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"