BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருகோணமலையை உலுக்கும் தொடர் மாயம்! - வயது மாணவன் மீட்பு; பெண் சிப்பாயைத் தேடும் பொலிஸார் - களத்தில் இறங்கிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா.

திருகோணமலையை உலுக்கும் தொடர் மாயம்! - வயது மாணவன் மீட்பு; பெண் சிப்பாயைத் தேடும் பொலிஸார் - களத்தில் இறங்கிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மூன்று வெவ்வேறு நபர்கள் காணாமல் போன சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என வெளிவிவகார பிரதி அமைச்சரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் ஹேமச்சந்திரா கேட்டுக்கொண்டுள்ளார்.


பதிவான மூன்று முக்கிய சம்பவங்கள்:
கடந்த திங்கட்கிழமை (26) முதல் திருகோணமலையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பின்வரும் மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன:


முச்சக்கர வண்டி சாரதி: மாவட்ட பொது வைத்தியசாலை தரிப்பிடத்திலிருந்து காணாமல் போன சாரதி, இன்று உடல் முழுவதும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவன் மீட்பு: நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் எனும் மாணவர் நேற்று காணாமல் போன நிலையில், பொலிஸாரின் முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

பெண் சிப்பாய் மாயம்: திருகோணமலை கடற்படைத் தளத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், விடுமுறையில் சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பிரதி அமைச்சரின் உறுதிமொழி:
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "இந்த மூன்று சம்பவங்களும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. விசாரணையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், குற்றவாளிகள் குறித்த சில அடையாளங்களும் கிடைத்துள்ளன. வதந்திகளை நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம்; சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், மாயமான பெண் சிப்பாயைப் பாதுகாப்பாக மீட்கவும் அனைத்து பாதுகாப்புப் பிரிவினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாக அவர் மேலும் உறுதி அளித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"