வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மத்திய மலைநாடு, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் காற்று பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகள்
பொதுமக்கள் எச்சரிக்கை! பலத்த காற்றுடன் கூடிய இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக