மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண் ஓடை பகுதியில், எவ்வித மருத்துவத் தகுதியும் இன்றி சட்டவிரோதமாக கிளினிக் நடத்தி வந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 3 வருடங்களாக தன்னை ஒரு மருத்துவர் என அடையாளப்படுத்திக் கொண்டு, அவர் பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்தமை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சமூக வலைதள மோசடி: இவர் மருத்துவர் போன்ற உடையணிந்து கிளினிக்கில் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி, மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.
அதிரடிச் சோதனை: மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த மருத்துவ நிலையம் முற்றுகையிடப்பட்டது.
ஆதாரங்கள் இன்மை: சோதனையின் போது அவரிடம் மருத்துவ அடையாள அட்டை அல்லது நிலையத்தைப் பராமரிப்பதற்கான எவ்வித சட்டபூர்வ ஆவணங்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்டவை: அந்த நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பொலிஸார் சான்றுப் பொருட்களாக மீட்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக