இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள காணொளி அறிக்கையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நெதன்யாகுவுக்கு எதிராக பிறப்பித்துள்ள பிடியாணையை சுட்டிக்காட்டிய அவர், அவரை போர்க் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் நபராக குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நெதன்யாகு நியூயோர்க் நகருக்கு வருகை தந்தால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற அண்மைய ஊகங்கள் குறித்து விளக்கமளித்த ஜோஹ்ரன் மம்தானி, அமெரிக்க சட்டங்களின் அடிப்படையில் நியூயோர்க் நகர நிர்வாகத்திற்கு தனிப்பட்ட முறையில் அவரைக் கைது செய்யும் சட்ட அதிகாரம் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.
எனினும், சர்வதேச சட்டம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான நடைமுறைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் உரிய சட்ட அமைப்புகளின் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக