நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் கடைசி திரைப்படம் எனக் கருதப்படும் இந்தப் படத்தை காண ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குகளுக்கு திரண்டுள்ளனர். குறிப்பாக, தளபதி விஜய்யின் FDFS காட்சியை கடைசி முறையாக காணும் உணர்வுடன் ரசிகர்கள் திரைப்படத்தை கொண்டாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் அதிகமான திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக ‘ஜனநாயகன்’ சாதனை படைத்துள்ளதாகவும், சுமார் 580 திரையரங்குகளில் 1,050க்கும் மேற்பட்ட திரைகளில் படம் வெளியானதாகவும் கூறப்படுகிறது.
படம் இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டதால் முதல் நாளில் குறிப்பிடத்தக்க வசூல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் மட்டும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரூ.6 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விஜய்யின் கடைசி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக