நீரிழிவு நோயாளிகள் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் இனிப்பு மற்றும் பலகாரங்களைச் சாப்பிட முடியவில்லையே என்று வருத்தப்படுவதுண்டு. பொதுவாகக் கஞ்சி வகைகள் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக உயர்த்தும் என்பதால் அவை தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்படும். ஆனால், குறிப்பிட்ட தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தக் கஞ்சி, சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
ராகி, பார்லி மற்றும் சாமை ஆகிய மூன்று ஆரோக்கியமான தானியங்களின் கலவை, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதுடன் சர்க்கரையின் அளவையும் சீராக வைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்: ராகி (1 டேபிள் ஸ்பூன்), பார்லி (1 டேபிள் ஸ்பூன்), சாமை (1 டேபிள் ஸ்பூன்).
தயாரிப்பு: 1. மூன்றையும் நன்றாக அரைத்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
3. அரைத்த பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்து, கொதிக்கும் நீரில் ஊற்றிக் கிளறவும்.
4. கஞ்சி பதத்திற்கு வெந்து வந்ததும் சிறிதளவு உப்பு சேர்த்துப் பருகலாம்.
குறிப்பு: பண்டிகை காலங்களில் இனிப்புகளுக்கு மாற்றாக இந்த ஆரோக்கியமான கஞ்சியை எடுத்துக்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த தேர்வாகும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக