கரூர் மாவட்டத்தில் 41 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. (CBI) தலைமையகத்தில் நேரில் ஆஜரானார். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அனுப்பிய சம்மனை ஏற்று, அவர் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
நான்கு அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. சிறப்புக் குழு, விஜய்யிடம் மட்டும் தனியாக சுமார் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்து தீவிர விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. பல மணி நேரம் நீடித்த இந்த விசாரணைக்குப் பிறகு, அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
விசாரணை ஒத்திவைப்பு:
முதலில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் கட்ட விசாரணை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அவர் டெல்லியில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு நேரில் ஆஜராவதாக விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டது. இதனால் இன்று நடைபெறவிருந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவர் ஆஜராக வேண்டிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக