BREAKING
ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் சாப்பிட விஜய் கூப்பிட்டும் நான் போகல..கேம் ஆடிய சிலர்!! உதயநிதி சொன்ன ரகசியம்.. ரூ. 100 கோடி வசூலை தாண்டிய DC படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் சாப்பிட விஜய் கூப்பிட்டும் நான் போகல..கேம் ஆடிய சிலர்!! உதயநிதி சொன்ன ரகசியம்.. ரூ. 100 கோடி வசூலை தாண்டிய DC படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை

ஹொரணை பணக் கொள்ளை வழக்கு - வங்கி பாதுகாப்பு அதிகாரி விளக்கமறியலில்

ஹொரணை பணக் கொள்ளை வழக்கு - வங்கி பாதுகாப்பு அதிகாரி விளக்கமறியலில்

ஹொரணையில் அமைந்துள்ள அரச வங்கியின் ஏடிஎம் இயந்திரத்திற்கு கொண்டு வரப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வங்கியின் பாதுகாப்பு அதிகாரியை ஜூன் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ஹொரணை தலைமை நீதிபதி லக்மினி விதானகமகே பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபரின் பயன்பாட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், சம்பவம் தொடர்பான பாதுகாப்பு கமரா காட்சிகளை சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைகளின் போது, இந்த கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் வங்கியின் உதவி மேலாளருடன் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

எனினும், சந்தேகநபருக்காக முன்னிலையான சட்டத்தரணிகள், அவருக்கு இந்த கொள்ளைச் சம்பவத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை என வாதிட்டதுடன், அதனை வலியுறுத்தும் வகையில் சுருக்க அறிக்கையொன்றையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல தகவல்களை கண்டறியும் நடவடிக்கைகளில் விசாரணைக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"