ஓமன் கடற்கரைக்கு அருகில் இந்திய பணியாளர்கள் இருந்த எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் எண்ணெய் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீற முயன்றதாகக் கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
பலாவ் நாட்டின் கொடியுடன் பயணித்த ‘M/T Settebello’ என்ற அந்த கப்பலில் மொத்தம் 24 இந்திய ஊழியர்கள் இருந்ததாகவும், தாக்குதலுக்குப் பிறகு 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வர்த்தக கப்பல்கள் குறிவைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்தியா கூறியுள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர் இந்திய அரசு ஓமனில் உள்ள தூதரகத்தின் மூலம் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் அழைக்கப்பட்டு இந்தியாவின் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் உத்தரவின் பேரில் கப்பலின் இயந்திர அறை குறிவைக்கப்பட்டதாகவும், இது மொத்தம் எட்டாவது கப்பல் நடவடிக்கை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இந்தியா–அமெரிக்கா இராஜதந்திர உறவுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என கவலை எழுந்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக