BREAKING
திறைசேரியில் ஒரு டிரில்லியன் ரூபா இல்லை? அரசின் பிரச்சாரத்திற்கு எதிராக வெளியான புதிய தகவல்கள் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு; மக்களுக்கு நிவாரணம் வழங்கும் லங்கா சதொசவின் அதிரடி அறிவிப்பு இணையத்தில் வருமானம் தருவதாக கூறி மோசடி! இலட்சக்கணக்கான ரூபாயுடன் பெண் கைது புதன் நட்சத்திர மாற்றம்: மிதுனம், சிம்மம், துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை; ஜாக்பாட் அடிக்கும் காலம் ஆரம்பம் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! மத்திய வங்கி வெளியிட்ட விசேட வர்த்தமானி அமுலுக்கு வருகிறது திறைசேரியில் ஒரு டிரில்லியன் ரூபா இல்லை? அரசின் பிரச்சாரத்திற்கு எதிராக வெளியான புதிய தகவல்கள் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு; மக்களுக்கு நிவாரணம் வழங்கும் லங்கா சதொசவின் அதிரடி அறிவிப்பு இணையத்தில் வருமானம் தருவதாக கூறி மோசடி! இலட்சக்கணக்கான ரூபாயுடன் பெண் கைது புதன் நட்சத்திர மாற்றம்: மிதுனம், சிம்மம், துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை; ஜாக்பாட் அடிக்கும் காலம் ஆரம்பம் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! மத்திய வங்கி வெளியிட்ட விசேட வர்த்தமானி அமுலுக்கு வருகிறது

சஹ்ரான் கும்பலுக்கு சம்பளம் வழங்கியதாக சலே மீது சரத் பொன்சேகா பரபரப்பு குற்றச்சாட்டு!

சஹ்ரான் கும்பலுக்கு சம்பளம் வழங்கியதாக சலே மீது சரத் பொன்சேகா பரபரப்பு குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு சுரேஷ் சலே சம்பளம் வழங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடி அனுமதி மற்றும் அறிவுறுத்தலின் கீழ் இடம்பெற்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுரேஷ் சலே ஒரு இராணுவ அதிகாரி என்பதை விட கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய நபராக செயற்பட்டதாகவும், அவரது அனுமதியின்றி எந்த முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் சுரேஷ் சலேவை புலனாய்வுப் பிரிவு பதவிகளில் இருந்து நீக்கியிருந்த போதிலும், பின்னர் அவர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் மீண்டும் இணைக்கப்பட்டதாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவகாரம் மீண்டும் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"