BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சொகுசு வீட்டில் விபச்சார விடுதி: யாழில் சிக்கிய கிளிநொச்சி நபர் மற்றும் பெண்கள்!

சொகுசு வீட்டில் விபச்சார விடுதி: யாழில் சிக்கிய கிளிநொச்சி நபர் மற்றும் பெண்கள்!

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து சில நாட்களாக அந்த வீட்டைக் கண்காணித்து வந்த பொலிஸார், நேற்று முன்தினம் (ஜனவரி 10) இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்.

 திருநெல்வேலி பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் ஒருவருக்குச் சொந்தமான நவீன சொகுசு வீட்டினை, கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்குவதற்காக என்று கூறி வாடகைக்கு எடுத்துள்ளார்.

 அந்த வீட்டிற்கு அடிக்கடி சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஆண்களும் பெண்களும் வந்து செல்வதைக் கவனித்த அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

 பொலிஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் விடுதியை நடத்தி வந்த கிளிநொச்சி நபர் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

 நேற்றைய தினம் (ஜனவரி 11) சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"