தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் Ram Charan நடிப்பில் வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை பதிவு செய்து வருகிறது.
சிரஞ்சீவியின் மகனாக சினிமாவில் அறிமுகமானாலும், தனது கடின உழைப்பாலும் தேர்ந்த நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கிய ராம் சரண், இந்தப் படத்திலும் விளையாட்டை மையமாகக் கொண்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
பிரம்மாண்டமாக சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக A. R. Rahman பணியாற்றியுள்ளார். ஜான்வி கபூர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘பெத்தி’ திரைப்படம், தொடர்ந்து திரையரங்குகளில் வலுவான வசூலை பதிவு செய்து வருகிறது. ஆரம்ப விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், ரசிகர்களின் ஆதரவு மற்றும் பெரிய அளவிலான திரையரங்க வெளியீடு காரணமாக டிக்கெட் விற்பனை அதிகரித்துள்ளது.
இப்போது வெளியான தகவலின்படி, படம் வெறும் 5 நாட்களில் உலகளவில் சுமார் ரூ.265 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது படக்குழுவிற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நாட்களிலும் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ‘பெத்தி’ திரைப்படம் இந்த ஆண்டின் முக்கிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களில் ஒன்றாக மாறும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக