பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைப்பு நிகழ்வில் அண்ணா தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர். நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசியல் சூழ்நிலை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, செங்கோட்டையன் வந்தபோது ஏற்பட்ட விமர்சனங்கள் பின்னர் மாறியுள்ளதாகவும், தற்போதைய அரசியல் சூழலில் தவெகவின் நிலை பலமாக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், “நேர்மையான நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு கொள்கையுடன் தவெக செயல்படுகிறது” எனவும் கூறினார்.
அதோடு, “90 சதவிகித அதிமுக தொண்டர்கள் தவெகவுடன் இணைவதற்கு தயாராக உள்ளனர்; அடுத்த ஒரு மாதத்தில் பெரிய அளவிலான இணைப்பு நடைபெறும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக