அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கான மே மாத கொடுப்பனவு இன்று (29) அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் உள்ள தகுதியான முதியோர்கள் இதன் மூலம் நேரடியாக தங்களது அஸ்வெசும கணக்குகள் வழியாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
முதலாம் கட்டத்தில் மட்டும் 3.12 பில்லியன் ரூபாய் அளவிலும், இரண்டாம் கட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 73,663 முதியோர்களுக்கு 368 மில்லியன் ரூபாய் அளவிலும் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான முதியோர் நேரடியாக பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக