விஜய் டிவி தொடர்ந்து TRP போட்டியில் முன்னிலை பெறும் நோக்கில் புதிய திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் இந்த ஞாயிற்றுக்கிழமை ‘துரந்தர்’ திரைப்படத்தை ஒளிபரப்ப இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 31ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு ‘துரந்தர்’ திரைப்படத்தின் முதல் பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த ஒளிபரப்பால், வார இறுதியில் டிவி பார்வையாளர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக