மாத்தளை மாவட்டத்தின் லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் கடந்த 11.07.2026 அன்று இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காட்டு யானை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிவுலவாடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக