யாழ்ப்பாணத்தில் பிறந்து 24 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்பற்று - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத்தினரின் தகவலின்படி, குழந்தைக்கு நேற்று இரவு திடீரென காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் உயிரிழப்பு குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், குழந்தையின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய மரண விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக