30 வயதான தனுஷ்க ஸ்ரீ நாமல் ஜெயதோங்கா என்ற இலங்கை இளைஞரே டோக்கியோ பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம்: கடந்த டிசம்பர் 21-ஆம் திகதி அதிகாலை 3:30 மணியளவில், ஷிபுயாவின் ஜிங்குமே பகுதியில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை வழிமறித்துத் தாக்கியுள்ளார்.
கொள்ளை: அந்தப் பெண்ணின் வாயை மூடி மிரட்டிய தனுஷ்க, அவரைத் தரையில் தள்ளிவிட்டு அவரிடமிருந்த 10,500 யென் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
பாதிப்பு: இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்து, கைகள் மற்றும் முழங்கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர் குற்றங்கள்: இந்தச் சம்பவத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, அதே பகுதியில் மற்றொரு 20 வயது பெண்ணின் பையை பறிக்க முயன்ற சம்பவத்திலும் இவருக்குத் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஒப்புதல்: சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் ஜனவரி 8-ஆம் திகதி கைது செய்யப்பட்ட தனுஷ்க, விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக