விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற சீரியல்களான சரவணன் மீனாட்சி, 7சி, மௌன ராகம், பாரதி கண்ணம்மா வரிசையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலுக்கு என்றுமே தனி இடம் உண்டு. அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் தொடர், கடந்த 2023-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்தாலும், மூர்த்தி, கதிர், முல்லை என முதல் பாகத்தின் கதாபாத்திரங்களை ரசிகர்கள் இன்றும் சமூக வலைதளங்களில் மிஸ் செய்வதாகக் கூறி வருகின்றனர்.
ரசிகர்களின் இந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தை மீண்டும் ஒளிபரப்ப விஜய் டிவி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் இந்தத் தொடர் மீண்டும் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் இந்தத் தொடரைக் காணலாம். பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் இந்த அறிவிப்பு விஜய் டிவி ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக