BREAKING
குச்சவெளி இளைஞர் மீது தாக்குதல் மற்றும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முறைப்பாடு யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் பழைய மாவட்டச் செயலகத்தை பார்வையிட்ட அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஜனநாயகன் முதல் நாள் வசூலில் சாதனை; சென்னையில் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல் டார்ஃபூர் கிளர்ச்சித் தலைவர் அப்துல்லா பண்டா மீதான போர்க்குற்ற வழக்கை கைவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கறுப்பு ஜூலை நினைவேந்தல்: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் குச்சவெளி இளைஞர் மீது தாக்குதல் மற்றும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முறைப்பாடு யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் பழைய மாவட்டச் செயலகத்தை பார்வையிட்ட அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஜனநாயகன் முதல் நாள் வசூலில் சாதனை; சென்னையில் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல் டார்ஃபூர் கிளர்ச்சித் தலைவர் அப்துல்லா பண்டா மீதான போர்க்குற்ற வழக்கை கைவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கறுப்பு ஜூலை நினைவேந்தல்: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

விஷ பாம்புகளை வளர்த்து கோடிகள் சம்பாதிக்கும் இளம் பெண்: ஆபத்தான தொழிலில் அதிரடி வெற்றி

விஷ பாம்புகளை வளர்த்து கோடிகள் சம்பாதிக்கும் இளம் பெண்: ஆபத்தான தொழிலில் அதிரடி வெற்றி

China நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Guangxi மாகாணத்தைச் சேர்ந்த கென் என்ற இளம் பெண், விஷ பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பல்கலைக்கழகக் கல்வியை முடித்த பிறகு பெரிய நிறுவனங்களில் வேலை செய்யாமல், தனது குடும்பத்தின் பாரம்பரிய தொழிலான பாம்பு வளர்ப்பை தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் இது மிகுந்த ஆபத்தானது என அவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் தொழில் வளர்ந்தபோது கென் அதில் முழுமையாக ஈடுபட்டார்.

தற்போது, 60,000-க்கும் மேற்பட்ட Snake களை நிர்வகித்து வருகிறார். இதில் மிகுந்த விஷத்தன்மை கொண்ட பல்வேறு வகை பாம்புகள் உள்ளன. குறிப்பாக, விஷம் சேகரிக்கும் தொழில் இவரின் முக்கிய வருமானமாகும். ஒரு கிராம் பாம்பு விஷம் கூட உயர்ந்த விலைக்கு விற்கப்படுவதால், இந்தத் தொழில் மிகப்பெரிய லாபத்தை தருகிறது.

இதனுடன், பாம்பின் இறைச்சி, பித்தப்பை மற்றும் எண்ணெய் போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதால் கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. அனைத்து செலவுகளையும் கழித்த பின்னரும், ஆண்டுக்கு ஒரு மில்லியன் யுவானுக்கு மேல் (இந்திய மதிப்பில் ரூ.1.3 கோடி) வருமானம் ஈட்டுகிறார்.

இந்த ஆபத்தான தொழிலில் பல முறை பாம்பு கடியையும் அனுபவித்ததாக அவர் பகிர்ந்துள்ளார். இருந்தாலும் தைரியமாக தொடர்ந்து இந்தத் தொழிலை முன்னெடுத்து வருவது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"