BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

யாழில் வாந்தியுடன் ஏற்பட்ட துயரம் வயது சிறுமி உயிரிழப்பு

யாழில் வாந்தியுடன் ஏற்பட்ட துயரம் வயது சிறுமி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வயிற்றுவலி மற்றும் வாந்தி காரணமாக பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமி கடந்த 13ஆம் திகதி முதல் வயிற்றுவலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த அவர், பின்னர் நிலைமை மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

உடற்கூற்று பரிசோதனையில், குடல்வளரி காரணமாக ஏற்பட்ட வயிற்றுவலியால் வாந்தி ஏற்பட்டதும், அந்த வாந்தி சுவாசக் குழாயினுள் சென்றதால் மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து திடீர் மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"