தென்னிலங்கையில் உள்ள காலி, ஹபரதுவ கொக்கல கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த 25 வயது ஜுட் ஷெவந்த பெரேரா மற்றும் 21 வயது என்டன் ஷெனாவ் பெரேரா ஆகியோர் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை அருகிலிருந்த ஹபரதுவ பொலிஸார் மற்றும் சுற்றுலா விடுதி உயிர்காப்புப் பிரிவு உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தாலும், மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பே இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
அந்த கடற்பகுதி மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். முன்னதாகவும் இதே பகுதியில் பலர் நீரில் மூழ்கி உயிருக்கு ஆபத்துக்குள்ளான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக