BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

காலி ஹபரதுவ கடற்கரையில் பரிதாபம் நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் உயிரிழப்பு

காலி ஹபரதுவ கடற்கரையில் பரிதாபம் நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் உயிரிழப்பு

தென்னிலங்கையில் உள்ள காலி, ஹபரதுவ கொக்கல கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த 25 வயது ஜுட் ஷெவந்த பெரேரா மற்றும் 21 வயது என்டன் ஷெனாவ் பெரேரா ஆகியோர் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை அருகிலிருந்த ஹபரதுவ பொலிஸார் மற்றும் சுற்றுலா விடுதி உயிர்காப்புப் பிரிவு உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தாலும், மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பே இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

அந்த கடற்பகுதி மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். முன்னதாகவும் இதே பகுதியில் பலர் நீரில் மூழ்கி உயிருக்கு ஆபத்துக்குள்ளான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"