BREAKING
சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட வந்த கனேடிய பிரதிநிதிகள் அனுமதி இன்றி திரும்பினர் சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட வந்த கனேடிய பிரதிநிதிகள் அனுமதி இன்றி திரும்பினர்

வயது சிறுவனின் அதிரடி: பெங்களூரை வீழ்த்திய வைபவ் சூர்யவன்ஷிக்கு விராட் கோலி கொடுத்த நெகிழ்ச்சிப் பரிசு!

வயது சிறுவனின் அதிரடி: பெங்களூரை வீழ்த்திய வைபவ் சூர்யவன்ஷிக்கு விராட் கோலி கொடுத்த நெகிழ்ச்சிப் பரிசு!

கவுகாத்தியில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி, கேப்டன் ரஜத் படிதாரின் அரைசதம் மற்றும் விராட் கோலி, வெங்கடேஷ் ஐயரின் அதிரடியால் 201 ரன்களைக் குவித்தது. 202 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, 15 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடி மின்னல் வேகத்தில் தொடக்கம் தந்தார். ஜோஷ் ஹேசில்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட அவர், வெறும் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 78 ரன்களை விளாசினார்.


இந்த அதிரடியின் மூலம் நடப்புத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான 'ஆரஞ்சு தொப்பியை' (Orange Cap) சூர்யவன்ஷி கைப்பற்றினார். சூர்யவன்ஷி மற்றும் துருவ் ஜூரலின் (81 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 12 பந்துகள் மீதமிருக்கையிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின், சூர்யவன்ஷியின் திறமையைக் கண்டு வியந்த விராட் கோலி, அவரை நேரில் அழைத்து பாராட்டியதுடன், அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணித் தொப்பியில் "அன்புள்ள வைபவ், மிகச் சிறப்பாக விளையாடினாய்" என எழுதி கையொப்பமிட்டு பரிசளித்தார். இந்த நெகிழ்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"