BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: புதிய புள்ளிவிபரத் தரவுகள் வெளியீடு!

இலங்கையில் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: புதிய புள்ளிவிபரத் தரவுகள் வெளியீடு!

இலங்கையின் தற்போதைய சனத்தொகைப் போக்கின்படி, ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் தங்களது துணைகளை இழந்தவர்களாக உள்ளனர் எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய ரீதியில் 9.4 சதவீத பெண்கள் கணவனை இழந்தவர்களாக இருக்கும் நிலையில், மனைவியை இழந்த ஆண்களின் விகிதம் வெறும் 1.7 சதவீதமாக மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த பாரிய இடைவெளியானது இலங்கையில் பெண்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறது.


இன ரீதியான தரவுகளை ஆராயும்போது, பறங்கியர் சமூகத்தில் மிக உயர்வாக 10.7 சதவீத பெண்கள் கணவனை இழந்தவர்களாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தியத் தமிழர் அல்லது மலையகத் தமிழர் சமூகத்தில் 10.5 சதவீத பெண்கள் இப்பட்டியலில் உள்ளனர். சிங்களவர் மற்றும் இலங்கைத் தமிழர் சமூகங்களில் இந்த விகிதம் தலா 9.6 சதவீதமாகச் சம நிலையில் உள்ளது. ஒப்பீட்டளவில், இலங்கைச் சோனகர் (முஸ்லிம்) சமூகத்திலேயே மிகக் குறைந்த அளவாக 7.1 சதவீத பெண்கள் துணையை இழந்தவர்களாகப் பதிவாகியுள்ளனர். அனைத்து சமூகங்களிலும் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் தனித்து வாழும் நிலை காணப்படுவதால், இது குறித்த சமூக ரீதியான மேலதிக அவதானிப்புகள் தேவைப்படுகின்றன.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"