சன் தொலைக்காட்சியின் 'தமிழ் செல்வி' தொடர் மூலம் அறிமுகமாகி, பின்னர் ஜீ தமிழின் 'மாரி' சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வென்றவர் நடிகை ஆஷிகா கோபால் படுகோனே. கன்னடம் மற்றும் தெலுங்கு சின்னத்திரையிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், 'மாரி' தொடர் நிறைவடைந்த பிறகு தமிழில் புதிய வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தார். இந்த நிலையில், அவர் மீண்டும் தமிழ் சீரியலில் கமிட்டாகியுள்ள செய்தி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஆல்யா மானசா நடிப்பில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'பாரிஜாதம்' சீரியலில் ஆஷிகா ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் (Special Appearance) நடிக்கவுள்ளார். குறிப்பாக, 'சண்டே ஸ்பெஷல்' எபிசோட்களில் இவரது கதாபாத்திரம் கதையின் போக்கை மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 'மாரி' சீரியலில் அமைதியான நடிப்பால் கவர்ந்த ஆஷிகா, தற்போது 'பாரிஜாதம்' தொடரில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக