BREAKING
6 தலைமுறைகள், 83 குடும்ப உறுப்பினர்கள்... ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் வாழும் ஆந்திராவின் அதிசய கூட்டுக் குடும்பம்! சன் டிவி லட்சுமி சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – இனி எந்த நேரத்தில் பார்க்கலாம்? இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போருக்கு அரசின் முக்கிய அறிவிப்பு – 2030க்குள் வெறிநாய்க்கடி நோயை ஒழிக்க புதிய நடவடிக்கை கொழும்பில் சொகுசு வாகனத்தில் பயணித்த இளம் பெண் கைது – ரூ.149 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய அதிர்ச்சி பிரஸ்ஸல்ஸ் கட்டுமானப் பணியிடத்தில் பாரிய தீ விபத்து; பலர் உயிரிழப்பு, 6 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்கிறது 6 தலைமுறைகள், 83 குடும்ப உறுப்பினர்கள்... ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் வாழும் ஆந்திராவின் அதிசய கூட்டுக் குடும்பம்! சன் டிவி லட்சுமி சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – இனி எந்த நேரத்தில் பார்க்கலாம்? இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போருக்கு அரசின் முக்கிய அறிவிப்பு – 2030க்குள் வெறிநாய்க்கடி நோயை ஒழிக்க புதிய நடவடிக்கை கொழும்பில் சொகுசு வாகனத்தில் பயணித்த இளம் பெண் கைது – ரூ.149 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய அதிர்ச்சி பிரஸ்ஸல்ஸ் கட்டுமானப் பணியிடத்தில் பாரிய தீ விபத்து; பலர் உயிரிழப்பு, 6 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்கிறது

கொழும்பில் சொகுசு வாகனத்தில் பயணித்த இளம் பெண் கைது ரூ. கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய அதிர்ச்சி

கொழும்பில் சொகுசு வாகனத்தில் பயணித்த இளம் பெண் கைது ரூ. கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய அதிர்ச்சி

கொழும்பு மாதம்பிட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பெருமளவு ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, மாதம்பிட்டிய பள்ளிவாசலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த சொகுசு வாகனம் ஒன்றை திங்கட்கிழமை (13) பகல் வேளையில் மாதம்பிட்டிய பொலிஸார் நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது வாகனத்தில் பயணித்த பெண்ணின் வசம் கடத்தும் நோக்கில் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, தெனியாய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளம் பெண்ணை பொலிஸார் உடனடியாக கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மூலாதாரம், அது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு விநியோகிக்கப்பட இருந்தது மற்றும் இதன் பின்னணியில் செயல்பட்டிருக்கக்கூடிய போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பில் மாதம்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த கைது முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் குறித்து விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"