முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை வெளிப்படையாகச் சமர்ப்பிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை ஒன்றின் தொடர்ச்சியாக, அவரது சொத்து விபரங்களைச் சத்தியக்கடதாசி (Affidavit) மூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அண்மையில் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தது. இது குறித்து நேற்று (09.04.2026) தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், இந்தக் கோரிக்கையை ஏற்று உரிய ஆவணங்களை வழங்கத் தான் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கோ அல்லது தனது குடும்பத்தாருக்கோ சொத்துக்களை மறைக்க வேண்டிய எவ்விதத் தேவையும் இல்லை என்று வலியுறுத்திய மகிந்த ராஜபக்ச, சட்ட ரீதியான அனைத்து நடைமுறைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இவர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக