அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான உடன்படிக்கையைத் தொடர்ந்து, ஈரான் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. ஈரானின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரான் முன்வைத்த 10 அம்சக் கோரிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாகவும், இது ஈரானுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உலகளாவிய அழுத்தங்களுக்கு மத்தியிலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அமெரிக்காவை இணங்கச் செய்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபை (Supreme National Security Council) இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போதைய சூழல் ஈரானின் கையை ஓங்கச் செய்துள்ளதாகவும், இது ஈரானிய இராஜதந்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. டிரம்ப் உத்தியோகபூர்வமாகப் போர் நிறுத்தத்தை அறிவிக்கும் முன்னரே, திரைமறைவில் நடந்த தீவிரப் பேச்சுவார்த்தைகளின் பலனாகவே இந்த உடன்படிக்கை எட்டப்பட்டிருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கச் சம்மதித்ததன் மூலம் ஈரான் தனது சர்வதேச செல்வாக்கை நிரூபித்துள்ளதாக அந்நாட்டுத் தரப்பில் வாதிடப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக