தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாகத் 'டாப்' நடிகையாகத் திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, அண்மைக்காலமாக இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறி வருகிறார். குறிப்பாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து, அவர் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தன்னைப்பற்றித் தொடர்ந்து பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: "நான் படங்களை விட்டுவிட்டேன், ஒரு பணக்கார வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டேன், நேற்றோடு இரண்டு வயதான 4 குழந்தைகளை வளர்த்து வருகிறேனாம். இன்னும் ஏதாவது இதில் சேர்க்க வேண்டுமா? அல்லது உங்களது கற்பனைத் திறன் இவ்வளவுதானா?" என மிகக் காரசாரமாகவும் கிண்டலாகவும் கேள்வி எழுப்பியுள்ளார். தன்னைச் சுற்றித் தேவையின்றிப் பரப்பப்படும் விமர்சனங்கள் மற்றும் ஆதாரமற்ற செய்திகள் குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தவே அவர் இந்தப் பதிவை இட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக