BREAKING
டீயுடன் இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை முட்டையை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டுமா? உணவு பாதுகாப்பு குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் அனுராதபுர குண்டுத்தாக்குதல் வழக்கு: பிரபாகரன் வழங்கியதாகக் கூறப்படும் பொருட்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு கிராமத்து சுவையில் மணம்கொஞ்சும் கருவாட்டு குழம்பு: எளிய முறையில் செய்வது எப்படி? 'காதல் சொல்ல வந்தேன்' நடிகர் யுதன் பாலாஜி தற்போது ஆஸ்திரேலியாவில் சைபர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வருகிறார் டீயுடன் இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை முட்டையை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டுமா? உணவு பாதுகாப்பு குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் அனுராதபுர குண்டுத்தாக்குதல் வழக்கு: பிரபாகரன் வழங்கியதாகக் கூறப்படும் பொருட்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு கிராமத்து சுவையில் மணம்கொஞ்சும் கருவாட்டு குழம்பு: எளிய முறையில் செய்வது எப்படி? 'காதல் சொல்ல வந்தேன்' நடிகர் யுதன் பாலாஜி தற்போது ஆஸ்திரேலியாவில் சைபர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்

"சஞ்சீவ் கோயங்கா ஒரு கோமாளி": லலித் மோடி கடும் தாக்குதல் - ஐபிஎல் அணிகளின் அதிரடி விற்பனையால் வெடித்த சர்ச்சை!

"சஞ்சீவ் கோயங்கா ஒரு கோமாளி": லலித் மோடி கடும் தாக்குதல் - ஐபிஎல் அணிகளின் அதிரடி விற்பனையால் வெடித்த சர்ச்சை!

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சுமார் 16,600 கோடி ரூபாய்க்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுமார் 15,000 கோடி ரூபாய்க்கும் புதிய குழுமங்களுக்கு விற்கப்பட்டுள்ளன. இந்த பிரம்மாண்ட வளர்ச்சியைப் பாராட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஐபிஎல் தொடரின் இந்த மாபெரும் மதிப்பிற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் தொலைநோக்கு பார்வையே முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.


ஐபிஎல் தொடரை உருவாக்கிய லலித் மோடியின் பெயரை அவர் குறிப்பிடாததால் ஆத்திரமடைந்த லலித் மோடி, சஞ்சீவ் கோயங்காவை "கோமாளி" எனச் சாடியுள்ளார். "இந்த ஐபிஎல் மாடலை உருவாக்கியது யார் என்பதை கோயங்கா மறந்துவிட்டார்; அவருக்கு ஞாபக மறதி வந்துவிட்டது. ஒரு ட்வீட் மூலம் வரலாற்றை மாற்றிவிடலாம் என நினைக்கும் இவருக்கு கிரிக்கெட் குறித்து எந்த அறிவும் இல்லை," என லலித் மோடி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். 2010-ல் இந்தியாவை விட்டு வெளியேறிய லலித் மோடி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஐபிஎல் விவகாரத்தில் உரிமையாளர் ஒருவரை பகிரங்கமாக வசைபாடியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"