BREAKING
ஹீமோகுளோபின் குறைவா? உடனே கவனிக்க வேண்டிய அறிகுறிகள் மற்றும் இயற்கை தீர்வுகள் இதோ! உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: பாம்பு கடித்த சிறுவனை மூடநம்பிக்கையால் கங்கையில் 12 மணி நேரம் மிதக்கவைத்த துயரம் வைரல் வீடியோ: பிரமிக்க வைக்கும் மீன் வேட்டை காட்சி – பெரிய மீனை அசால்டாக விழுங்கிய நீர்பறவை! இலங்கையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு – 22K பவுண் ரூ. 3,69,900 ஆக அதிகரிப்பு பிரபல பாடகர் ரிச்சர்ட் ஆலிசன் நாதன் உடல்நிலை மோசம்: பேச முடியாத நிலை – உதவிக்கு வந்த கேபிஒய் பாலா! ஹீமோகுளோபின் குறைவா? உடனே கவனிக்க வேண்டிய அறிகுறிகள் மற்றும் இயற்கை தீர்வுகள் இதோ! உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: பாம்பு கடித்த சிறுவனை மூடநம்பிக்கையால் கங்கையில் 12 மணி நேரம் மிதக்கவைத்த துயரம் வைரல் வீடியோ: பிரமிக்க வைக்கும் மீன் வேட்டை காட்சி – பெரிய மீனை அசால்டாக விழுங்கிய நீர்பறவை! இலங்கையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு – 22K பவுண் ரூ. 3,69,900 ஆக அதிகரிப்பு பிரபல பாடகர் ரிச்சர்ட் ஆலிசன் நாதன் உடல்நிலை மோசம்: பேச முடியாத நிலை – உதவிக்கு வந்த கேபிஒய் பாலா!

சந்திரிக்கா காலத்தில் தொடங்கிய புதிய அரசியலமைப்புத் முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன

சந்திரிக்கா காலத்தில் தொடங்கிய புதிய அரசியலமைப்புத் முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல்துறை விரிவுரையாளர் இராமசாமி ரமேஷ் தெரிவித்ததன்படி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல தசாப்தங்களைக் கடந்தும் இன்றும் முடிவின்றித் தொடர்கிறது.

இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பேச்சுக்கள் 1994ஆம் ஆண்டு தீவிரமாக இடம்பெற்று வந்துள்ளன. 1994ல் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க, புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சி செய்தார். ஆனால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. குறிப்பாக, 2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவு, சபை நடுவே தீயிட்டு எரிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த சம்பவமாகும்.

சந்திரிக்கா காலத்தைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து கட்சிக் கூட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற்ற போதிலும், இறுதி முடிவு எட்டப்படவில்லை.

பின்னர் வந்த 'நல்லாட்சி' அரசாங்கமும் இந்த முயற்சியில் மிகுந்த நம்பிக்கையுடன் செயற்பட்டது. இருப்பினும், 2019 ஆம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மற்றும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக முயற்சிகள் கைகூடவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், முந்தைய முயற்சிகள் போலவே இத்துண்டும் வெற்றி பெறவில்லை.

இராமசாமி ரமேஷ் சுட்டிக்காட்டியது போல, அதேபோன்ற முயற்சிகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழும் தொடர்கின்றன. இவ்வாறு பல தசாப்தங்களாக தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் நிறைவான அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி இன்னும் முடிவடைந்ததே இல்லை.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"