BREAKING
6 தலைமுறைகள், 83 குடும்ப உறுப்பினர்கள்... ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் வாழும் ஆந்திராவின் அதிசய கூட்டுக் குடும்பம்! சன் டிவி லட்சுமி சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – இனி எந்த நேரத்தில் பார்க்கலாம்? இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போருக்கு அரசின் முக்கிய அறிவிப்பு – 2030க்குள் வெறிநாய்க்கடி நோயை ஒழிக்க புதிய நடவடிக்கை கொழும்பில் சொகுசு வாகனத்தில் பயணித்த இளம் பெண் கைது – ரூ.149 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய அதிர்ச்சி பிரஸ்ஸல்ஸ் கட்டுமானப் பணியிடத்தில் பாரிய தீ விபத்து; பலர் உயிரிழப்பு, 6 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்கிறது 6 தலைமுறைகள், 83 குடும்ப உறுப்பினர்கள்... ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் வாழும் ஆந்திராவின் அதிசய கூட்டுக் குடும்பம்! சன் டிவி லட்சுமி சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – இனி எந்த நேரத்தில் பார்க்கலாம்? இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போருக்கு அரசின் முக்கிய அறிவிப்பு – 2030க்குள் வெறிநாய்க்கடி நோயை ஒழிக்க புதிய நடவடிக்கை கொழும்பில் சொகுசு வாகனத்தில் பயணித்த இளம் பெண் கைது – ரூ.149 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய அதிர்ச்சி பிரஸ்ஸல்ஸ் கட்டுமானப் பணியிடத்தில் பாரிய தீ விபத்து; பலர் உயிரிழப்பு, 6 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்கிறது

உதய்பூரில் பிரம்மாண்ட திருமணம்: விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா இணைவு பேசுபொருள்

உதய்பூரில் பிரம்மாண்ட திருமணம்: விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா இணைவு பேசுபொருள்

திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் இன்று உதய்பூர் நகரில் அமைந்துள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைபெறுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமண நிகழ்ச்சி நடைபெறும் அந்த மாளிகையின் தினசரி வாடகை ரூ.1 லட்சத்திற்கும் அதிகம் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் மரபு கலைநயத்துடன் அமைந்துள்ள அரண்மனைச் சூழலில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் விழா நடைபெறுகிறது.

வெளியான தகவல்களின் படி, இவ்விருவரும் ஒரே நாளில் இரு பாரம்பரிய முறைகளில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

காலை: தெலுங்கு பாரம்பரிய முறையில்

மாலை: கொடவா பாரம்பரிய முறையில்

இரு குடும்பங்களின் மரபுகளையும் மதிக்கும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் தேவரகொண்டாவின் தாய் மாதவி, தங்கள் குடும்ப பாரம்பரியப்படி மருமகள் ராஷ்மிகாவுக்கு பரம்பரை வளையல்களை பரிசாக வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குடும்ப மரபின் அடையாளமாக கருதப்படுகிறது.

திருமணத்திற்குப் பின், வருகிற மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத் நகரில் உள்ள Taj Krishna ஹோட்டலில் பிரம்மாண்ட ரிசப்ஷன் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் சினிமா மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகில் பெரும் ரசிகர் ஆதரவு பெற்ற இந்த ஜோடியின் திருமணம், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"