தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், Enga Veetu Mappillai நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பரவலாக அறிமுகமானவர் நடிகை Aparnathi.
Colors Tamil தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி, புதிய கான்செப்டுடன் வெளியானது. இதில் நடிகர் Arya உடன் இணைந்து தோன்றியதன் மூலம் அபர்ணதி கவனம் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து தேன், ஜெயில் போன்ற திரைப்படங்களில் நடித்த அவர், இறுகப்பற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றார்.
அண்மையில் அளித்த பேட்டியில், ஆர்யாவுடன் மீண்டும் நடிப்பது குறித்து அபர்ணதி விளக்கம் அளித்துள்ளார். ஒரு ரியாலிட்டி ஷோவில் 100 நாட்கள் ஆர்யாவுடன் பயணம் செய்த அனுபவம் தன்னிடம் நல்ல நினைவுகளை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த அனுபவத்திற்குப் பின்னர் ஒரு கற்பனைக்கதை அடிப்படையில் ரொமான்ஸ் அல்லது தங்கை போன்ற வேடங்களில் நடிக்கத் தமக்கு விருப்பமில்லை என அவர் கூறியுள்ளார். அதனால் தான் ஆர்யாவுடன் திரைப்படம் செய்யத் தயக்கம் உள்ளதாகவும் அபர்ணதி விளக்கமளித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக